தெய்வங்கள்

தெய்வங்கள்

நினைவிழந்து நிம்மதி கெடும்






ஆரோக்கியம் அவசிய மில்லையென
அவர்களுக்கு தெரியவில்லை  பின்
அமைதி கெட்டு அழிவுப் பாதை ஆவது- ஆசையால்
ஆத்திரம்  கொண்டு  ஆளையும் கொல்வது

சாத்திரம் தேடார் சரித்திரம் அறியார்

போக்கிட மின்றி  பெரும்பினி சேர்ந்து
மக்களை கொல்லும் மடைமை யாகி  -பணம்
பெரும் ஆசை தரும்பின் தவறு செய்யும்

குடும்பம் கூடி பேச மறந்து குறுகி

நெடும்பகை தேடி நேசமற்று  மாறும்
நினைவிழந்து  நிம்மதி கெடும்-வாழ்க்கை
நிச்சயமற்ற தன்மையாகும் நிலைமை மாறும்

தரித்திரம் சேரும்  தயவு கெடும்

தன்னுள் சிந்திக்கா தன்மை யாகும்
பிரித்திட மனதில்  தினம் பேசும்-குழப்பமாய்
பிள்ளை உற்றார் நேசம் மறையும்

பெரியவர் பெண்டிர் பிள்ளை மறந்து

உரியதை நாடி உள்ளம் போகும்
பேராசையால் பெரும்பிணியும் சேரும்-மனித
பிழைப்பென எண்ணி பித்தாய் மாறும்

உழைக்க மறந்து உண்ண தோன்றும்

உயிரை பிடுங்கி சொத்தும் சேர்க்கும்
மலைக்க வைத்து மனதை உருக்கி-இறுதியில்
மாமிசமாக்கி உள்மனமே பிணமாகும்

Comments

  1. anaiththuk kavidhagalum arumai. ezhuthup pani thodara vazhthukal .

    ReplyDelete
  2. நன்றி ,தொடர்ந்து படியுங்கள்

    ReplyDelete
  3. மனிதம்மின்றி இருக்க வேண்டாம்

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more