தெய்வங்கள்

தெய்வங்கள்

ஆட்டோக்கார அண்ணாச்சி....

ஆட்டோக்கார அண்ணாசி
அறிவியல் கணக்கு என்னாச்சி
ஆயில் அதிகமா போடுறதாலே-கண்ணு
அரிப்பு அதிகமா போயிடுச்சி

சந்துபொந்தா போகுறீங்க
சாகசமெல்லாம் செய்யுறீங்க
கண்ணு எரியும் புகைய விட்டு-மக்களுக்கு
கண்ணீரையும் வரவைக்கிறீங்க

மோட்டார் சைக்கிலபோறவங்க
முகத்திரையும் வீனா போச்சு
மூச்சு முட்டி நிக்கிறதும்-திட்டி
முனகிகிட்டே போக வைக்கிறீங்க

சுவாசகோளாறு உள்ளவங்க
மூச்சுவிட முடியலிங்க
சுற்று சூழல் பாதுகாக்க-நீங்களும்
சுகாதாரம் பற்றி யோசிங்க




Comments

  1. சுற்று சூழல் பாதுகாக்க-நீங்களும்
    சுகாதாரம் பற்றி யோசிங்க//

    சுற்று சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதாங்கம்மா.நான் சிரமப் பட்டதாலே சொல்லத் தோணுது

      Delete
  2. ரசித்து படித்தேன் :)

    அழகிய விழிப்புணர்வு !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நம்மால் முடிந்ததை நயமாக சொல்வது நம் கடமையல்லவா?
      நீங்க வந்ததுக்கு நன்றி

      Delete
  3. Replies
    1. உண்மைதான் நண்பரே.சரியாக சொன்னேனா?

      Delete
  4. அண்ணாச்சி அறிந்தால் சரி...!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே அண்ணாச்சி என்று அன்பாக நாகரீகமாக சொன்னேன்.நீங்க சொன்னதுபோல் புரிந்துகொள்ளணும்

      Delete
  5. சுற்று சூழல் பாதுகாக்க-நீங்களும்
    சுகாதாரம் பற்றி யோசிங்க

    ஆட்டோகார அண்ணாசி
    அறிவியல் கணக்கு என்னாச்சி
    அண்ணாச்சிக்கு அறிவுரை சொன்னாச்சி ..!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க அம்மாச்சி .கார் இருந்தாலும் இப்போ உள்ள ட்ராபிக்ல கார் ஓட்டமுடியலே அதனாலே இருசக்கர வாகனம் தான் வசதியா இருக்கு ஆனாலும் புகையால ரோட்டுல்ல இருசக்கர வாகனம் ஓட்ட முடியல.

      Delete
  6. அண்ணாச்சி அண்ணாச்சி
    நீங்க சொன்னது எல்லாம் மனசிலாட்ச்சி
    கவிதையும் மனதை கொள்ளையாச்சி

    ReplyDelete
    Replies
    1. அப்படிங்களா சேச்சி.புரிய வேண்டியவங்க புரிச்சா பிரச்னை போச்சி

      Delete
  7. அருமை! சமூகத்தை நாமதான் பாதுகாக்க முடியும்.

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொருத்தருக்கும் கடமை உள்ளது நண்பரே .சிறுதுளி பெருவெள்ளம் போல.அசைக்க அசைக்க அம்மியும் நகரும்ன்னு சொல்வது சரிதான்

      Delete
  8. Replies
    1. கருத்தே சொல்லாவிட்டாலும் நன்றிங்க நீங்க வந்ததுக்கு.

      Delete
  9. அண்ணாச்சிக்கு நல்ல விழிப்பு.

    ReplyDelete
    Replies
    1. ஆட்டோக் கார அண்ணாச்சிக்குன்னு சொல்லுங்க.நீங்க வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும் நன்றிங்க

      Delete
  10. ஆட்டோகாரர்களுக்கு சொன்ன அறிவுரைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்கும் புரிய வைக்க சிறு முயற்சி.

      Delete
  11. சூப்பர்! நல்ல சிந்தனை... வாழ்த்துக்கள்!

    அட.. அருமையாக இருந்திச்சு
    அழகான கவிதையாச்சு
    இதைதெரியாம பலபேரு
    வாழ்க்கையுமே வீணாச்சு....

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க,உங்க கருத்துக்கும் வாழ்த்துக்கும்

      Delete
  12. // ஆயில் அதிகமா போடுறதாலே-கண்ணு
    அரிப்பு அதிகமா போயிடுச்சி //

    அவர்கள் மண்னெண்ணெய் கலந்தும் ஓட்டுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே.ஆனால் ஆயில்தான் தேவைக்கதிகமா போடுறாங்க .

      Delete
  13. பெட்ரோல் விலை அதிகரிப்பு
    கண்ணை கட்டுது....
    மாதாமாதம் உயர்த்திக்கொண்டே போகிறார்கள்.
    எங்குதான் சென்று முடியுமென்று
    தெரியவில்லை..

    எதிலும் அவசரம் ..விரைவு என்றாகிப்போன இவ்வாழ்வில்...
    தேவையான விழிப்பேற்றும் கவிதை ஐயா ...

    ReplyDelete
  14. உண்மைதான்.அவசரத்தில் ஆபத்தையும்தானே சந்திக்க உள்ளது

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more