Posts

Showing posts with the label / கவிதை/சமூகம்/மழைவேண்டி

தெய்வங்கள்

தெய்வங்கள்

மழையும் பெய்யவில்லை அதனால் .....

அருகருகே அதிக வீடுகளால் அன்றாடக் காற்றும் மறைக்குது ஆளாளுக்கு மின்சார பயன்பாட்டால் அதற்காகப்  பணமும் கரையுது மழையும் பெய்யவில்லை அதனால் மரங்களில் பச்சை செழுமையில்லை மதிய வேளையிலே எல்லோருக்கும் மறுபடித் தூங்கவேத் தயக்கமில்லை  ஏழையும் மனதால் வருந்தி எங்குமே செல்ல இயலவில்லை ஏர்பிடிக்க ஆசை இருந்தும் ஏரித்தண்ணிர்ப் பாய்ச்சலில்லை எப்போது மழை வருமோ எல்லோரின் மனம் மகிழுமோ தப்பாக மரம் வெட்டியதால் தண்டனை இப்போதே உள்ளது  இப்போதே எல்லோரும் யோசியுங்கள் இருக்கிற இடத்தில் மரங்களை இரண்டிரண்டு நட்டு வளருங்கள் இதையே எல்லோருமே சொல்லுங்கள் எல்லோரும் நன்றாக யோசித்தால்  எதிர்காலம் சிறப்பாய் இருக்கும் சொல்லாலே நில்லாமல் செயலில் செய்தாலே மழையும் வருமே  ----கவியாழி

ரசித்தவர்கள்