Posts

Showing posts with the label / காதல்

தெய்வங்கள்

தெய்வங்கள்

வண்டின்சுவைத் தெரிவாயா ?.........

வண்டின் சுவைத் தெரிவாயா? -------------------------------------------- மல்லிகைப் பூ தொடுத்து மலராக அசைந்து வந்து சொல்லாமல்ச் சொல்லியதாய் செல்லமாய்ச் சீண்டுகிறாய் சிறைபிடித்துத் தாண்டுகிறாய் துள்ளி ஒடும் மானைப்போல தோகைவிரித்த மயிலைப்போல மேல்லபேசும் தேனிப்போல மெதுவாய் சொல்லும் வார்த்தையாலே மேனியெல்லாம் சிலிர்க்குதடி காரிகையே கற்கண்டே காலம் சொல்லும் பூச்செண்டே கற்பனையை கடந்து வந்து கட்டியணைக்க மாட்டாயா கனிரசத்தை உணர்வாயா உள்ளமெல்லாம் புஞ்சையாக உழவனுக்கு மழையாக எண்ணிகொள்ளத் தோனுதாடி ஏக்கமின்னும் கூடுதடி என்னருகே செல்லும்போது வானமின்று வெளிச்சமழை வந்திறங்கும் நேரமுன்னே வாசமுல்லை மார்கழியே வந்தென்னை அணைப்பாயா வண்டின்சுவைத் தெரிவாயா

காதலி ! காதலா ! காதல்!

Image
ஒருதலைக் காதல் ஜெயித்ததில்லை உணர்வுள்ள காதல் தோற்றதில்லை மறு பிறப்பு மீண்டும் வருவதில்லை-காதல் மறந்து போனதாய் சரித்திரமில்லை மனம் பார்த்து வருவதே காதல் மிகையான பணம் பார்த்த தல்ல குணம் மாற்றியும் வரலாம்-காதல் கொள்கை உறுதி யோடும் வரலாம் அவசர காதல் அழிந்ததுண்டு அவசிய காதல் முறிந்ததுண்டு ரகசிய காதல் ஜெயித்ததில்லை-காதல் ரசனை மட்டுமே தகுதியில்லை மனதை மாற்ற போராடு மகிழ்ச்சியோடு அதை நீ நாடு புதிதாய் செய்வோர் புனிதத்தை -அன்பாய் புகழ்ந்து வாழ்த்தி  நீ சொல்லு பிரியும் காதல் தொடர்ந்ததில்லை பிரிக்கின்ற காதல் அழிவதில்லை புரிகின்றோர் காதல் முடிவதில்லை-வெற்றி புரிந்தோர் அதையும் தடுப்பதில்லை

இதழ் வேண்டும் எனக்கு..........

இதழ் வேண்டும் எனக்கு இதழ் வேண்டும் இமைமூடிப் பருக இதழ் வேண்டும் இணையாகும் முன்னே இதழ் வேண்டும் இறுக்கி அணைத்தபடி இதழ் வேண்டும் நுனி நாக்கில் சுவைக்க இதழ் வேண்டும் நெடுநேரம் முடியாத இதழ் வேண்டும் முடியாத நேரமாய் இதழ் வேண்டும் முப்பொழுதும் உணவாக இதழ் வேண்டும் எப்போதும் சுவையாக இதழ் வேண்டும் எழுச்சிப் பெரும் முன்னே இதழ் வேண்டும் இனிக்கின்ற  கனியாக இதழ் வேண்டும் கட்டுடலை சூடாக்க இதழ் வேண்டும் கனிந்தவுடன் முழுவதுமாய் கடைசிவரை எனக்கு  அது ? வேண்டும்.

ரசித்தவர்கள்