Posts

Showing posts with the label /கவிதை/கல்வி / குழந்தைகள்

தெய்வங்கள்

தெய்வங்கள்

அன்புச் செல்லக் குழந்தைகளே

அன்புச் செல்லக் குழந்தைகளே அறிவில் சிறந்த முல்லைகளே பண்பேக் குறையா செல்வங்களே பாசம் மிகுந்த மொட்டுகளே நல்லப் பிள்ளை அனைவருமே நன்குப் பேசி மகிழுங்களே அன்பு பாசம் அறிவையுமே அறிந்து பகிர்ந்து சொல்லுங்களே மாலைப் பொழுதில் விளையாடி மகிழ்ந்து நட்பாய் ஆடுங்களே மனதில் உள்ள எண்ணங்களை மதித்து உணர்ந்து செய்யுங்களே நல்ல நல்லக் கதைகளையும் நல்லோர் சொன்ன கருத்துகளும் நாளும் படித்து வாருங்களே நாட்டில் சிறந்து வாழுங்களே அன்னைத் தந்தை சொல்வதிலே அர்த்தம் உணர்ந்து கொள்ளுங்களே அறிவைச் சொல்லும் ஆசிரியர்கள் ஆழ்ந்து  மகிந்து   படியுங்களேன் (கவியாழி)

தத்து நடை நடந்துவந்து....

தத்து நடை நடந்து வந்து தாவித்தாவி தூக்கச் சொல்லும் திக்கித் திக்கி பேசுகின்ற தின்ன அடம் செய்யுகின்ற முத்து முத்துப் பல்லைக் காட்டி முத்தம் தந்து மடியில் அமர்ந்து முப்பொழுதும் அருகில் வந்தும் முத்தமழை விரும்பித் தந்தும் பட்டுப் போன்ற மேனியுடன் பாட்டுப்பாடிக் கதைகள் கேட்கும் பாட்டன் பாட்டி எப்பொழுதும் பக்கத்திலே இருக்கச் சொல்லும் பஞ்சுபோன்ற மெத்தை யாக்கி படுத்துறங்கி நெஞ்சின் மேலே பகலும் இரவும் எப்பொழுதும் பக்கத்திலே நெருங்கி வந்து தொட்டுத் தொட்டுப் பேசிதினம் தொந்தரவு செய்கின்ற மொட்டு போன்ற மழலைகளுக்கு நித்தம் கதை சொல்லுங்களேன்  (கவியாழி)

ரசித்தவர்கள்