Posts

Showing posts with the label /கவிதை/சமூகம்/ நட்பு

தெய்வங்கள்

தெய்வங்கள்

நல்லதைச் சொல்லிடும் நட்பு

நல்லதைச் சொல்லும்  நட்பு நாடகம் போலவே இன்றி நன்மையே செய்திடும் வல்லமை நட்புக்கு உண்டாம் உண்மையே எல்லையே இல்லையாம் அன்புக்கு ஏக்கமாய் இருக்குமாம் பார்ப்பதற்கு தொல்லையே இல்லாத நட்பினால் துன்பமும் விலகிடும் இன்பமாய் உள்ளதைக் கொண்டே தொடருமாம் உண்மையைப் பேசியே மலருமாம் ஊரும்  மாறிப் போனாலும் உண்மை நட்பு மாறாது பணத்தால் விலையோ போகாது பண்பால் மறக்கக் கூடாத மனத்தால் அன்றி நல்லன்பை மனிதன் பெறவே முடியாது நல்லவை மட்டுமே செய்யுமாம் நன்மைத் தீமையைச் சொல்லுமாம் எல்லையைத் தாண்டிய அன்புக்கு எளிதில் பிரிவும் இல்லையாம் பிள்ளைகள் பிறந்த பின்புமே பேரனைப் பார்த்துச் சொல்லுமாம்  நடந்ததை மகிழ்ந்ததைச் சொல்லியே நகைச்சுவை பொங்கச் செய்யுமாம் -------கவியாழி--------

ரசித்தவர்கள்