Posts

Showing posts with the label /கவிதை/துணைவன்/

தெய்வங்கள்

தெய்வங்கள்

ஓய்வு கொடுக்க வேண்டுமா

Image
ஆண்டுகள் பதினெட்டும்  என்னோடு ஆனந்த பயணம் செய்துவந்த அடிக்கடி நிற்காதக் களைக்காத ஆதவனின் நண்பன் கடிகாரம் வேதனையும் நாளும் கண்டவன் வேடிக்கை பலதும் பார்த்தவன் வீறிட்டு அழத்தெரியாத  பண்பன் வேகமாய் செல்லாத துணைவன் சாப்பிடும் நேரம் சொல்பவன் சாதனைக் கண்டே ரசித்தவன் சரிநிகர் சமமாய்  இருந்தவன் சங்கடம் பலதும் கண்டவன் அடிக்கடிப் பார்த்திடும் கடிகாரம் ஆன்மா இல்லாத அவதாரம் அனைவரும் விரும்பும் பலநேரம் அதுவே எல்லோருக்கும் ஆதாரம் உடலோடு உறவாட தவறவில்லை உயிரின்றி  என்றுமே நின்றதில்லை உள்ளமும் என்றுமே வெறுத்ததில்லை உறவாக என்னையும் பிரிந்ததில்லை ஓய்வு வேண்டியே விரும்பியே ஓடிக்கொண்டே இருந்தாலும் வயதால் ஒளியிழந்து கையில் துடிக்கிறான் ஓய்வு கொடுக்க வேண்டுமா ------கவியாழி------

ரசித்தவர்கள்