Posts

Showing posts with the label கவிதை/ வேதனை/பாரதி

தெய்வங்கள்

தெய்வங்கள்

இன்றும் வாழும் பாரதியே....

Image
இன்றும் வாழும் பாரதியே எப்படி மறப்பேன் உனையே ! எழுச்சித் தமிழை உணர்த்தி-அன்று எல்லோர் மனதிலும் இடம் பிடித்தாய்! உன்னை விட்டு வைத்தால் உலகையே மாற்று வாயென, பெண்மை யொத்த சிலரால்-மனதால் பெரும்பிணி யேற்றும் வாழ்ந்தாய் கண்ணைபோல் வளர்த்த மகளை கலப்புத் திருமணம் செய்து கடவுள் இதையும் ஏற்பாரென-விரும்பி கண்குளிர பார்க்க எண்ணியதை, திண்ணைத் தோறும் சென்று தீராப்பழி சுமத்தி வந்தோர் பெண்ணை மயக்கிப் பிரித்தே-நீயின்றி திருமணம் செய்து வைத்தார் கண்ணை இழந்துக் கலங்கிக் கடின வாழ்க்கை வாழ்ந்தும் காளையெனச் சுற்றித் திரிந்ததை-சூழ்சியால் கண்துயில வைத்து விட்டனரே! (கவியாழி) 

ரசித்தவர்கள்