Posts

Showing posts with the label கவிதை/அஞ்சலி/சிவலிங்கனார்

தெய்வங்கள்

தெய்வங்கள்

அய்யா.ஆ.சிவலிங்கனார்.மறைவு-வாழ்த்துப்பா!

Image
அய்யா.ஆ.சிவலிங்கனார் அவர்களுக்கு அஞ்சலி            10.07.2014 அன்று அய்யாவுடன் புலவர் குட்டியாண்டி (எ)திருநாவளவன், .  புலவர்.இராமனுசம்,புலவர்.கி,த.பச்சியப்பன் மற்றும் அவரின் இரு மகன்களுடன் நானும். தங்கமான எங்களாசான்                                                               ************** தங்கமான எங்களாசான் தமிழை மட்டும்     ஊட்டவில்லை, இளமையில் நாங்கள் செய்த கொங்குதமிழ்க் குறும்புகளோ கொஞ்சமல்ல;     கோதில்லாப் படிப்புக்கும் பங்க மின்றி மங்கையர் உடன்பயிலும் வகுப்பில் நீங்கள்    மாத்தமிழைக் கற்றலோன்றே குறியாய் நிற்பீர் சங்கடங்கள் வந்துவிடும் சார்ந்த கல்வி    நின்றுவிடும் எண்ணியதைப் பாரீர் என்பார்; பொங்குதமிழ் உணர்ச்சிக்குப் பொறுப்பு மாவார்    புரியவைக்கும் ஆற்றலிலும் பொறுமை காப்பார் தங்குதடை இல்லாமல் தமிழில் பாட்டுத்    தந்திடுவார் மேற்கோள்கள் பலவும் காட்டி; சங்கநூல்கள் சதுராடும் இவரின் வாயில்     சாந்துணையும் தமிழ்படிக்கத் தூண்டும் சொற்கள் நுங்கினைப்போல் உண்டுண்டு மகிழ்ந்த நாளை     நும்மிடத்தில் எடுத்துரைக்கக் காலம் போதா!

ரசித்தவர்கள்