Posts

Showing posts with the label கவிதை/காதல் /மகிழ்ச்சி

தெய்வங்கள்

தெய்வங்கள்

மயங்கியே படர்ந்தாள் தொடர்ந்தாள்

மின்னலிடைக் கொடியாள் வானத்தில் மேகத்தின் மேனியெல்லாம் தழுவி கன்னலென இருந்தக் கார்மேகத்தை வண்ண ஒளிவீசிச் சிரித்தாள் எண்ணம் எனக்கோ தெரியாமல் என்ன சொல்வதெனப் புரியாமல் சின்ன விழியிரண்டை மூடினேன் சில்லென்ற காற்றில் தேடினேன் கன்னம் சிவந்த கயல்விழியால் கண்டவுடன் சிரித்தாள் மறைந்தாள் தின்ன மறந்த தேன்பலாவின் திகட்டாத சுவையை மறுப்பேனா இன்னும் வேண்டுமென எப்போதுமே இனிமையான சுவையைத் தீண்டியே உண்ண விரும்பும் அவளை உதறித் தள்ளி விடுவேனா ஓடிச்சென்றுப் பார்த்தேன் அவளின் ஒருசுளையைத் தவிர்க்க முடியுமா ஓய்வாய் அருகில் அமர்ந்தேன் ஒருகிழி நடுவில் கிழித்தேன் இடைவெளி.........

வெள்ளையப்பன் வேதனையை மறைப்பவன்

வெள்ளை நிறத்தவன்  அவன் வேதனையை மறைக்க வைப்பவன் எல்லா  வீட்டிலும் இருப்பவன் ஏழையின் வீட்டிலும் குடியிருப்பவன் கொள்ளைப் பணத்தை முழுங்கி குடும்பம் முழுதையும் வதைப்பவன் இல்லை யென்றாலும் விடமாட்டன் இம்சையை தீர்க்கவே  விரும்புவான் தொல்லை கொடுக்கும் வலிக்கு தோதாய்  வந்து காப்பவன் பிள்ளைத் தாத்தா பாட்டிக்கும் பிணியைத் தீர்த்து வைப்பவன் எத்தனை  நிறத்திலும் இருந்தாலும் எல்லோர் மனதைப் போலவே துள்ளிச் சிரித்தே தொடர்வான் துணையாய் கூடவே வருவான் வறுமை வயதும் பாராமல் வாழ்வை தொடர விரும்பினால் வள்ளல் போலவே  நிம்மதியை வாரிவழங்கியே மகிழ்ந்திடுவான் முதியோர்தின வாழ்த்துக்கள் ---கவியாழி--

அழகிய கனிகளைப் பார்த்தேன்......

Image
(நன்றி கூகிள்) அழகிய கனிகளைப் பார்த்தேன் அதையே கைகளில் எடுத்தேன்  தாங்கிய கிளையைக் கண்டேன் தாவியே ஓடிப் பறித்தேன் இளமை அழகை கண்டேன் இதழில் சுவையைக் கொண்டேன் பழகிய சுவையை உணர்ந்தேன் பழத்தை முழுவதும் ரசித்தேன்  பதமாய் ரசத்தைப் பிழிந்தேன் பருகிப் பருகி மகிழ்ந்தேன்  திரண்ட முழுதும் சுவைத்தேன் தீண்டியே மகிழ்ச்சியில் திளைத்தேன்  தினமும் வேண்டியே நின்றேன் தெகிட்டா தமிழை மணந்தேன்  கலையாய் அதையே கனித்தேன் கவிதையை அதனால் படைத்தேன்

ரசித்தவர்கள்