Posts

Showing posts with the label கவிதை/சமூகம்

தெய்வங்கள்

தெய்வங்கள்

தோல்வியில்லைத் தொடர்ந்திடு

அழுகின்ற குரலென்றும் அடங்காமல் முடியாது அடக்குமுறை எந்நாளும் அறவழியாய் ஆகாது துடிக்கின்ற உயிரென்றும் துணையின்றிப் போகாது துன்பமே எல்லோர்க்கும் வழித்துணையாய்  மாறாது விழுகின்ற நொடிஎல்லாம் விரல்துடிக்க மறவாது விழுந்தாலும் மனதால் வீழ்த்திவிட முடியாது தோற்றதாய் சொன்னாலும் துவண்டுவிட முடியாது தோல்வியை தொடர்ந்தவன் வெற்றிபெற தடையேது மீண்டும் மீண்டுமென மகிழ்ச்சியாய் துவங்கிடு தாண்டுமுயரம்த் தடுத்தாலும் தோல்வியில்லைத் தொடர்ந்திடு

நம்பிக்கை வார்த்தைகளை கூறுங்கள்.......

Image
பிரச்சனை என்னவென்று கேளுங்கள் பிள்ளையுடன் நண்பனாக பழகுங்கள் நல்லவற்றை நாலுமுறை பேசுங்கள்-அன்பாய் நம்பிக்கை வார்த்தைகளை  கூறுங்கள் உள்ளபடி வாழ்வுதனை வாழ்வதற்கு உண்மையாக தகுந்த வழிகாட்டுங்கள் சொல்லுவதை சரியாக சொல்லுங்கள்-பிறர் சொல்லும்படி நீங்களுமே வாழுங்கள் கஷ்டத்தை மட்டுமே சொல்லாமல் கடன் வாங்கி வந்தவழி கூறுங்கள் இல்லையென்று எப்போதும் -சொல்லாமல் இருப்பதை எடுத்துரைத்து காட்டுங்கள் நல்லவற்றை நாடவேண்டி எப்போதும் நயமாக நல்லொழுக்கம் புகட்டுங்கள் நாலுபேர் மத்தியிலே உயர்வாக -வாழ்க்கை நம்பிக்கை வார்த்தைகளை விதையுங்கள்

ஆம் ! தமிழா .......

வாய்மூடி மௌனியாக வாழத்தான் வேண்டும் வந்தோரோயும் சொந்தமாக வாழ்த்தத்தான் வேண்டும் கூன் குருடு செவிடு போல இருக்கத்தான் வேண்டும் கூடிவாழ்வதில் ஒற்றுமை கொண்டுத்தான் ஆக வேண்டும் தொழில் முடங்கி தொடரத்தான் வேண்டும் தொல்லைகளைத் தாங்கியும் சிரிக்கத்தான் வேண்டும் வந்தோரை வாழச் சொல்லி வழியின்றி தவிக்க வேண்டும் வாழ்நாளை  சுருக்கி வயிரும் காயத்தான் வேண்டும் சன நாயகம் என்றும் சகித்துக்கொள்ள வேண்டும் சமதர்ம சமுதாயம் போற்றத்தான் வேண்டும் சாதியும் வேண்டும் சமத்துவமும் வேண்டும் மீதியும் கேட்டு மிதிபட்டு முரண்பட்டும் வாழ வேண்டும் உண்ண உணவில்லை உள்ளூரில் சங்கம் வேண்டும் சாத்திரம் பேசி சகோதர சண்டையும் வேண்டும் இருந்தாலும் எல்லாமே சகித்துவாழ வேண்டும் எப்போதும் தமிழுக்காக ஏழ்மையோடும் வாழ வேண்டும் ஆம் .. தமிழா ! வாழ்ந்துதான் ஆக வேண்டும்

ரசித்தவர்கள்