Posts

Showing posts with the label கவிதை/சமூகம் /கேள்வி

தெய்வங்கள்

தெய்வங்கள்

இடையில் வந்த சாதியாலே

உயர்ந்த தாழ்ந்த சாதியென்றே உண்ணும் உணவில் இல்லையே உலகில் பேசும் மொழியிலேயும் உயர்ந்து தாழ்வு மில்லையே உழைக்கும் இனம் மட்டுமே உயர்வுத் தாழ்வு பார்க்கிறார்கள் பிழைக்க வழித் தெரிந்திருதும் பேதம் கொண்டு வாழ்கிறார்கள் ஒற்றுமையாய் வாழ்ந்த மக்கள் ஓலமிட்டே தினம்  அழுகிறார்கள் உழைப்பதற்கே தினம் பயந்து ஓடி ஒளிந்து வாழ்கிறார்கள் மறக்க வேண்டா மென்று மக்களையும் சேர்கிறார்கள் மனிதனையும் மிருகமாக்கி மக்களாட்சி கேட்கிறார்கள் இழிந்த நிலையில் வாழ்கையில் இதையும் ஏன்  வளர்க்கிறார்கள் இடையில் வந்த சாதியாலே இனம் பிரிந்து நிற்ககிறார்கள் துயரம் மிகும் வாழ்க்கையில் துணைக்குச் சாதி வேண்டுமா தூய்மையான அன்பும் நட்புடனே தூய வாழ்க்கை வேண்டுமா

மேகத்தின் சேதியது...

Image
மேகத்தின் சேதியது மேனியிலே பட்டவுடன் தாகமெடுக்கிறதோ தனிமை தவிக்கிறதோ? பூவெல்லாம் பேசியதும் புல்செடியும் கேட்டவுடன் பூவைக்கு இனிக்கிறதோ பூவைக்கத் துடிக்கிறதோ? வழியெங்கும் பசுமரங்கள் வாழ்த்தாக தூவியே பூமழை பொழிகிறதோ புதுப்பாதைத் தெரிகிறதோ பச்சைக்கிளியும் புறாவும் பக்கமாய்  நெருங்கியே இச்சைச் செய்வது இம்சையாய் இருக்கிறதோ? இளம்மனது கருகியதால் இன்பத்தை இழந்துவிட்டு இப்போது ஏக்கத்தையே இனிமையாக்க மறுப்பதோ? தவறென்ன வாழ்கையில் தைரியமாய் செய்யுங்கள் உறவங்கே மறுத்தாலும் உரிமையாய் தொடருங்கள் வாழ்கையை தீர்மானிக்க வயதுண்டு அறிந்துகொள் வாழ்கையே உன்கைளில் வாழ்வுமுந்தன் உரிமையே

அதிகாலைச் சூரியனே..

Image
அதிகாலைச் சூரியனே அன்பான வரவேற்பு ஆண்டவனைத் தரிசிக்க ஆர்வமுடன் வருகிறாயோ இன்முகத்தில் நீ வந்து இன்னல் தீர வேண்டுகிறாய் ஈசனையும் பார்த்துவிட்டு ஈகையோடு வாழ்த்துகிறாய் என்ன தேடி வருகின்றாய் எதற்காக  நீ கோபமுற்றாய் ஏனிந்த தீக் கனலை ஏற்றிவிட்டு தாக்குகிறாய் ஐயமில்லை உன் கோபம் ஐவருள் நீ அடக்கம்தானே ஒற்றுமையாய்  பஞ்சபூதம் ஒன்றி நன்மை செய்தாலே ஓங்கி வரும் நல்லொழுக்கம் ஒவ்வொருவரும் பேணுவார்கள் அஃதே எல்லோருக்கும் நலமாம்

உணர்வில் தமிழன் என்றிருந்தால்........

தமிழைப் போற்றி வந்தவர்கள் தனியாய் பிரிந்தக் காரணமேன் மொழியால் ஒன்றாய் சேர்ந்தவர்கள் மோதிக் கொல்லும் நிலையெதனால் உயிராய் உணர்வாய் வாழ்ந்தவர்கள் உடனே விலகிப் போனதுமேன் பகையைச் சேர்த்து எப்பொழுதும் பண்பை மறந்து வாழ்வதுமேன் சாதியும் மதமும் எப்பொழுதும் சண்டை வந்திடக் காரணமேன் மோதிக் கொண்டு இருப்பதற்கு முடிவைக் காணா போவதுமேன் தம்மை பிரித்த துரோகிகளின் தரத்தை அறிய வேண்டாமா உண்மை நிலையை உணராமல் உயிரைப் போக்க வேண்டுமா ஒற்றுமையோடு நாம் இருந்தால் உணர்வில் தமிழன் என்றிருந்தால் கற்றவர் சொல்லை கேட்டறிந்தால் சுற்றமும் நட்பாய் வாழ்ந்திடலாம்

ரசித்தவர்கள்