Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/ ஆரோக்கியம்

தெய்வங்கள்

தெய்வங்கள்

இயற்கைச் சூழலை ரசியுங்கள்

இயற்கை சூழலை ரசியுங்கள் இனிமை கிடைப்பதை உணருங்கள் இன்பம் தேடிச்சென்றாலே எப்போதும் இளமை கொண்டே வாழலாம் கண்கள் குளிர்ச்சி கொள்ளும் கனத்த மனதும் லேசாகும் அங்கம் முழுதும் மகிழ்ச்சியால் அடையும் நன்றே உணர்வாலே மலையில் மரங்களைக் காணுங்கள் மகிழ்ச்சி கிடைத்திடும் நம்புங்கள் இலைகள் தழைகள் பசுமையாய் இன்பம் தந்திடும் இளமையாய் பசுமை மாறா காட்டிலே பாய்ந்து தாவிடும் குரங்குகள் பறந்து பேசிடும் பறவைகள் பார்க்கும் திசையிலே இன்பமே மான்கள் துள்ளி ஓடிடும் மயில்கள் தாவி களித்திடும் முயல்கள் ஒளிந்தே ஓடிடும் உள்ளமும் தூய்மை யாகிடும் அடிக்கடி வெளியே செல்லுங்கள் ஆனந்தம் மிகுவதைக் காணுங்கள் குடும்பம் அனைவரும் சேர்ந்தாலே குறையும் கஷ்டங்கள் தன்னாலே

இயற்கையைப் போற்றுவோம்

அடர்ந்த மரங்கள் தெரிந்து அங்கங்கே புல்வெளிகள் படர்ந்து தொடர்ந்த காடுகள் மறைந்து தொலைந்தன பசுமை செடிகள் விடிந்ததை சொல்லும் குயிலும் வேடிக்கையாய் பேசும் கிளிகளும் எழுந்ததும் குளித்திடும் காக்கையும் எண்ணிக்கையும் குறைந்த குருவிகள் வேடிக்கைக் காட்டும் குரங்குகள் வேகமாய் செல்லும் பாம்பும் பழங்களைத் தின்ற வௌவாலும் பார்த்திட மகிழ்ந்தே இருந்தன இரம்மியமான இயற்கைச் சூழல் இரவிலும் மகிழ்ச்சியாய் இருந்ததை தொலைத்திடநாமும் காரணமாய் தொடர்ந்தே இருக்கிறோம் வாழ்கிறோம் இயற்கைப் போற்றி வாழ்வதினால் இரசாயனம் கலக்காத காய்கறிகள் தூய்மையான காற்றுடன் மீண்டும் தொடர நாமும் வழிசெய்வோம்

சூரியனைக் காணவில்லை......

ஆஹா சூரியனைக் காணவில்லை  அதனால் அற்புதமாய் இருக்கிறதே சொற்பதமாய் சொல்ல இயலவில்லை சுகமாகத்தான் இன்று விடிகிறது வழியெங்கும் மழைத் துளிகள் வானமின்றும் வாழ்த்தும் ஓசைகள் துளித்துவரும் அந்த ஆசைகள் துவக்கம்தான் எத்தனைச் சுகம் அடிக்கடி என்னை வருத்தாதே அடியேன் மனதைக் கெடுக்காதே இடிக்குது நிலைமைக் கொல்லாதே இளமையின் துடிப்பைக் கொடுக்காதே எப்போதோ ஏற்பட்ட இளமையுணர்வு இந்நேரம் அவசரமாய் ஏன்வந்தது  தப்பேதும் இல்லைதான் ஆனால் தயக்கம் மல்லவா வருகிறது முப்போதும் மகிழ்ந்த நாட்கள் முடிவின்றி தவிக்கிறதே முறையா முன்பொழுதில் வருவது சரியா முறையான இனிமை உணர்வா மழையே மீண்டும் வா!வா!! மகிழ்ச்சித் தொடந்துத் தா!தா!! இனிமை யுணர்வேப் போ!போ !! இரவில் மட்டும் ஹி!ஹி!!...

குண்டுத் தொல்லைக் குறையவே இல்லை

ஆணுக்கும் பெண்ணுக்கும்  ஒற்றுமை அடிவயிற்றில் இல்லையே வேற்றுமை ஆனாலும்  பெரிதாகத் தொல்லையில்லை அதற்குமே யாருக்கும் கவலையில்லை காலங் கடந்து  திண்பதும் கறியும் கொழுப்பும் உண்பதும் கடையில் கூடி பேசிக்கொண்டே கண்டபடி திண்ணுவதால் ஆகுமாம் விற்பனையில் முன்னாக வருவதற்கு வியாபார நோக்கமாய் விற்பதுதற்கு எத்தனையோ மருந்துகள்  உள்ளது எதற்குமே பலனில்லை இளைப்பதற்கு கற்பனைச்  செய்தாலும் குறையாது கண்டபடியும் சுருக்கவும் முடியாது கைவீசி நடப்போரை கடந்து கனதூரம் செல்லவே  இயலாது பட்டினிப் பசியாய் கிடந்து பழக்குவோம் உடலைக் குறைத்து பாட்டன் பாட்டி உடலைபோல பாதுகாப்போம் உடல் இளைத்து தினமும் காலையில் நடந்தே தண்ணீர் நிறையக் குடித்தே திண்பதில் கொஞ்சம் குறைத்தே திடமாய் வாழலாம் செழித்தே

ரசித்தவர்கள்