Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/ நட்பு

தெய்வங்கள்

தெய்வங்கள்

நட்பை நானும் மறக்கவில்லை

பணத்தை நானும் மதிப்பதில்லை-அதனால் பணமும் என்னிடம் தங்குவதில்லை தப்பாக நட்பை சொன்னதில்லை-இன்றும் தவறாக யாரிடமும் பழகுவதில்லை தோல்வியின் முகத்தை ரசித்ததுண்டு-அங்கே தோழனின் நட்பை கண்டதில்லை விடியும்வரை நான் காத்திருந்து -விளக்கை விரைந்தும் அணைத்த தில்லை துணையாய் நானும் இருந்ததுண்டு-அன்பாய் துணிந்து நெருங்கி வந்ததுண்டு நன்றி மறந்து வாழவில்லை-அதையும் நானும் மறுத்துப் பேசவில்லை கொள்கை மறந்து நினைவில்லை-என்றும் கோழையாக நானும் விரும்பவில்லை இத்தனை தூரம் வருவதற்கு-நட்பே இணைத்து வந்ததை மறக்கவில்லை (கவியாழி)

விரும்பி உன்னை முத்தமிட...

நண்பரையே இன்று காணவில்லை நாளும் கடந்து போகவில்லை எந்நிலையை எடுத்துச் சொல்ல -அவரன்றி எவரிடமும் மனது இல்லை பொன்பொருளைக் கேட்டதில்லை பெரும் தொகையும் தருவதில்லை என்னிடமும் கிடைப்பதற்கு வழியுமில்லை-அவரும் எனக்கும் சுமையாய் இருந்ததில்லை இரவிலின்று தூங்கவில்லை இன்று மனதில் மகிழ்ச்சியில்லை என்னவென்று புரியவில்லை -எப்படியோ என்னிடம் அமைதி இல்லை திரும்பி வரும் நேரத்தை நான் திசையெங்கும் பார்த்திருக்கிறேன் தெருவோரம் நின்று நானும்-உனக்காய் தேடிவந்து  தவமிருக்கிறேன்

ரசித்தவர்கள்