Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/ஆறுகள்

தெய்வங்கள்

தெய்வங்கள்

திரண்ட பாறையுமே தள்ளி

தினந்தோறும் மகிழ்ச்சியாய் ஓடி திசையெங்கும் செழிக்க வைத்து வனத்தையும்  வயலையும் காத்து வானம் மகிழ  வந்தாய் பலஊர்கள் மைல்கள்  தாண்டி பாமரனும் மகிழ்வாய் வாழ பரந்து விரிந்த பாதைவழியே பகலிரவு ஓடிவந்து மகிழ்ந்தாய் கிடந்த கற்கள் மலைகள் கடந்தும்  உடைத்தே நடந்து அடர்ந்த வனம் செழிக்க அமைதியாக உருட்டிச் சென்றாய் திரண்ட பாறையுமே தள்ளி திருட்டுத் தனமாய் கடத்தி வறண்ட இடத்திலும்  சென்று வழியெங்கும் சமன் செய்தாய் கண்குளிரக் காட்சி தந்த  கடவுளாய் போற்றி வந்த  தண்ணீரில் கடந்து வந்து தவமாகக் காத்து நின்றாய் சுரண்டலுக்கு ஆசைப் பட்ட சுயநலக் காரர்களின் கண்ணில் சூழ்ச்சிக்குத்  தப்ப மறந்து சுரண்டி சுரண்டி மடிந்தாய் தினந்தோறும் மணல் அள்ளியதால் திசையெங்கும் வறட்சி வந்தே பருவம் மாறிப் பகலவனின் பார்வையால் பாமரனும் வருந்துகிறான் நிலைமாறக் காரணம் தெரிந்தும் நீயும் மௌனம் காப்பதேன் நிம்மதியைக் கெடுத்தவரை ஏன் நேரம் கொண்டே அழிக்கவில்லை விலைபேசும் நிலைக்கே சென்றாயே வேதனை வேதனையே  எமக்கு விதியில்லை வீரமில்லைத் தடுக்க வீணர்களின்  விலைவ

ரசித்தவர்கள்