Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/உண்மை

தெய்வங்கள்

தெய்வங்கள்

நேர்மை வழியில் வாழ்ந்திடலாம்

பாம்பும் தேளும் பூரானும் பயந்தே ஓடி மறைந்திடுமாம் பகைத்தே நாமும் அடித்தாலே பாய்ந்தே நம்மைக் கடித்திடுமாம் வீம்பாய்க் காளையை மிரட்டினால் விரைந்தே வந்து முட்டுமாம் வீணாய் நிலத்தைப் போட்டாலே விளையும் நிலமும் கெட்டிடுமாம் வேண்டா வெறுப்பாய் பழகினாலே வேற்றுமை வந்தே பிரிக்குமாம் விசயம் இன்றி வாதிட்டாலே வீணே சண்டை வந்திடுமாம் ஈன்ற பொருளைக் காத்தாலே இறுதி நாட்கள் மகிழ்ந்திடுமாம் இல்லை என்றே சொல்லாமல் இருப்பதைக் கொடுத்தல் நலமாகும் எதிலும் பொறுமை இருந்தாலே எல்லா நலமும் கிடைக்குமாம் எளிதில் உணர்ச்சியில் தவறிழைத்தால் எதிராய்க் காரியம் கெடுக்குமாம் பாசம் கொண்டே பழகுங்கள் பகைமை எண்ணம் தவிருங்கள் நேசம் ஒன்றே ஒற்றுமையாய் நேர்மை வழியில் வாழ்ந்திடலாம் ********கவியாழி*******

ரசித்தவர்கள்