Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/உறவுகள்

தெய்வங்கள்

தெய்வங்கள்

அருகிலே இருந்தும் அறிவில்லாக் கூட்டாளி

அப்பன் பங்காளி அவனுமே எதிராளி அருகிலே இருந்தும் அறிவில்லாக்கூட்டாளி சுப்பன் வந்து சண்டை போட்டால் சுருக்கெனக்கோபமாய்ச்சொந்தமென வருமாம் ! வசிக்கும் இடத்திலே வறப்புச்சண்டையிட்டு வருவோர் போவோரிடம் வசையான சொன்னாலும் கசக்கும் வார்த்தையால் கண்டபடி திட்டினாலும் பசிக்கும் நேரத்திலே பங்கிட்டு உண்பாராம் ஆடுகளும் மாடுகளும் அருகே சென்றாலே அதையும் விரட்டி அங்கிருந்து துரத்தி ஓடிச் சென்று ஓடோடி விரட்டிடுவான் ஓய்ந்த நேரம் உட்கார்ந்து பேசிடுவான் உழவுக்கு ஏர்பிடித்து உரிமையுடன் சென்றாலும் ஊருக்கு தெரிவதுபோல் உறக்கப் பேசிடுவான் இழவுக்குச் சென்றாலும் இணைந்தே போனாலும் இருப்பிடமே வந்தவுடன் இணைபிரிய மாட்டானாம் கிணற்றிலே நீரைக்காலமாய்ப் பங்கிட்டுக் கீழ்வயலில் பாத்தியிட்டுக் கீரைகளை விதைத்து பணத்திலே சரியாய்ப்பங்கும் தருவானாம் பங்காளி என்றழைத்துப் பாசமுடன் இருப்பானாம் உழைப்பவன் மட்டுமே உடனடி சச்சரவை ஊராரும் மெச்சும்படி உடன் பங்காளியென உரிமையுடன் சண்டையிட்டு உடனே கூடுவான் உலகமே வியக்கும்படி உரிமை கொண்டாடிடுவான் ! ( கவியாழி )

கூட்டமாய் சொந்தங்கள் அருகில் இருந்தும் ...........

கூட்டமாய்ச் சொந்தங்கள் அருகில் இருப்பர் கொடுப்பதை வாங்கிடப் பலர் வருவர் நோட்டமாய்க் கவனித்து நேர்வழி சொல்லாது-கெட்டும் நோயுற்ற மனதையே குத்திக் கிழிப்பர் வாட்டமாய் வாழ்கையில் வந்தே உதவிடார் வழித்துணை யாருமே வந்திட மாட்டார் வாழ்க்கையில் துன்பமாய்  வாழ்ந்திடும் போதிலே-இருந்தும் வசவுமாய்ப் பழியுமாய்ச் சொல்லத் தயங்கிடார் கூட்டணி சேர்ந்து பழித்தே  பேசுவர் கூடுதல் சுமையாய்த் தனித்தே வைப்பர் பாட்டனும் பேரனைப் பார்க்க மறுப்பர்-ஆனாலும் பாசமாய் இருப்பதாய் அனைவரும் நடிப்பர் ஏழ்மையைப் போக்க யாருமே வந்திடார் ஏசியும் பேசியும் இருக்கத் தவறிடார் ஊரையும் நாட்டையும் உவமையாய்ச் சொல்லியே-வாழ்வில் ஊழ்வினை என்றே பலரும் சொல்லிடார் கேட்டதைக் கொடுத்து உதவி செய்தால் கேளிக்கை பேசலை நிறுத்தி கொண்டால் வாழ்கையின் தத்துவம் விளக்கிச் சொன்னால்-நிச்சயம் வணங்கியே கடவுளாய்  நன்றி சொல்வார் இயன்றதைக் கொடுத்து உதவி செய்து எதிர்காலத் தேவைக்கு  வழி அமைத்து முயன்றுமே விரைவில் முன்னுக்கு வர-உறவே முடிந்தால் அனைவரும் உதவி செய்வீர் ******கவியாழி******

ரசித்தவர்கள்