Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/கடமை

தெய்வங்கள்

தெய்வங்கள்

பொறுப்புள்ள தந்தையாய்....

பொறுப்புள்ள தந்தையாய் இருந்து பிள்ளையைப் படிக்க வைத்து மறுத்திடா செலவு செய்து மக்களைக் காத்திடு உண்மையாய் உணர்த்திடு உள்ள கடமை உன்னுடைய வேலை யென்று உள் வாங்கிப் புரிந்திடவே உதவியாகச் சொல்லிக் கொடு தடம் புரண்டு செல்லாமல் தன் மானம் இழக்காமல் இடம் பொருள் ஏவலையும் இன்முகமாய் சொல்லி வளர்த்திடு நன்னடத்தை நா நயம் நல்லோரின் நல் ஆசியும் எல்லாமும் தெரிந்திடவே எப்போதும்உணர்த்தி விடு மென்மையாக சொல்லிக் கொடு மகிழ்ச்சியாக உணர்த்தி விடு பெண்மையின் உயர் தத்துவத்தை போற்றிப் போற்றி வாழவிடு

ரசித்தவர்கள்