Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/நட்பு

தெய்வங்கள்

தெய்வங்கள்

குடும்பம் சிறக்கச் செய்வீர்

மனமே மனிதனின் எதிரி மாற்றமே அவனின் நண்பன் தினமும் நல்லதை செய்தால் திடமாய்  மாறும் மனிதமே கெடுதல் செய்யா மனதே கொடுக்கும் நன்மை நன்றே அடுத்தவர் மனதை  வருத்தி ஆறுதல் சொல்ல வேண்டாமே துணையாய் நல்ல வார்த்தை துயரம் போக்க இயலும் துணிவு என்று நினைத்து துச்சம் கொள்ள வேண்டாமே பழிகள் செய்யா வாழ்வும் பழுதாய் போனதும் இல்லை பயந்தும் வாழ்வோர்  என்றும் பெருமை பேசிய தில்லையே கொடுத்தும் உதவி செய்து கோழை யாகக  வேண்டாமே கொள்கை நன்றே வகுத்து குடும்பம் சிறக்கச் செய்வீரே

தமிழைப் போற்றியேப் பதிவிடுவோம்

நன்றி சொல்லா நட்பிணையே நாங்கள் வளர்க்க விரும்புகிறோம் நல்லவர் கெட்டவர் வெறுப்பின்றி நண்பராய் நினைத்தே பழகுகிறோம் வல்லவர் வறியவர் சொல்லாமல் வாழ்த்துச் சொல்லி மகிழ்ந்திடுவோம் இல்லையே என்பதைஉணர்த்தாமல் இருப்பதைப் பகிர்ந்தே புசித்திடுவோம் முதியவர் இளையவர் பகிர்வின்றி முறையே நட்பாய் மதித்திடுவோம் ஆடவர் பெண்டீர் அனைவருமே அன்பாய் மதித்தே நடந்திடுவோம் நல்லவவை கெட்டவை நடப்பதையே நாலே வரிகளில் எழுதிடுவோம் நன்மையும் தீமையும் நோக்காமல் நலமே போற்றியே பதிவிடுவோம்  இன்னல் துயரம் நடப்புகளை இணைய வலையில் பகிர்ந்திடுவோம் எல்லா ஊரிலும் எம்தமிழை இணையம் கொண்டே வளர்த்திடுவோம் சாதி மதங்களை மறந்திடுவோம் சமத்துவம் நன்றே போற்றிடுவோம் ஊரும் பேரும் தெரியாமல் உணர்வால் தமிழனய் அறிந்திடுவோம் இல்லம் இனமே பாராமல் இணைய வழியே பேசிடுவோம் வல்லமைத் தந்த தமிழுக்கு வாழ்த்துச் சொல்லியே வணங்கிடுவோம்

குறையே பேசும் நண்பர்களே

குறையே பேசும் நண்பர்களே குறைத்தே மனதில் காயங்களை மறைந்துப் போகா வார்த்தைகளை மறுபடி மடிந்து பேசுவதேன் நிறைகளை நீங்கள் பேசினால் நியாயமாக முதுகில் தட்டினால் பறந்தே போகும் வலியெல்லாம் பார்ப்பவர் மனதில் மகிழ்ச்சியாய் தவறே அவரும் செய்தாலும் தனையே மறந்து புரிந்தாலும் உறவை வளர்க்க உறுதுணையாய் உள்ளதைச் சொல்லி திருத்தலாமே உலகில் பலபேர் இருந்தாலும் உணர்த்த முடியா காரணத்தால் பகையே அதனால் உண்டாகி பலரும் வருந்தும் நிலைவேண்டா ஒற்றுமை கொண்டு வாழ்வதினால் உயர்வே நிறைய பெற்றிடலாம் கற்றவர் இதனை கண்டுரைத்து கண்டவர் திருந்த வாய்ப்பளிப்போமே

மனிதம் போற்றி வாழுங்களேன்.....

இனமே தமிழன் என்றுரைத்து எதிலும் சேர்ந்தே முடிவெடுத்து பணமோ மதமோ பாராமல்-நட்பை போற்றி தினமே வாழுங்களேன் அண்ணன் தம்பி உறவுகளாய் அனைவரும் கூடி வாழ்வதனால் தின்னைதோறும் நட்புறவாய்-அன்பை தினமும் போற்றி மகிழ்ந்திடலாம் உறவை மறுத்து வாழ்வதனால் உயர்வும் மகிழ்வும் தடையாகும் பிரிவைப் போற்றி வாழாமல்-ஒன்றிப் பிணைந்தே  மகிழ்ந்தே வாழுங்கள் மகிழ்ச்சியின் தத்துவம் புரியுமே மனித நேயம் தெரியுமே மக்கள் மனதை அறியுமே-உறவை மானிடம் போற்றி மகிழுமே சாதியும் மதமும் சொல்கிறது சரிசமம் உயிரென உயர்வாக நீதிக் கதைகளும் இதிகாசம்-எங்கும் நித்தம் சொல்வதும் இதைத்தானே மனித நேயம் வேண்டாமென மதமும் எங்கும்  சொன்னதில்லை மனிதனாக வாழ்வதற்கு  -நீங்களும் மனிதம் போற்றி வாழுங்களேன்

நேசமுள்ள நட்பு

சொந்தமாய் உறவாய் சொல்லமுடியா உணர்வாய் நெஞ்சமே மகிழ்வாய் நேசமுடன் இருப்பார் காசுபணம் தேவையில்லை கற்பனையாய் வருவதில்லை நேசமுள்ள நட்புக்கு-எப்போதும் நேரம் காலம் போதவில்லை ஆணோ பெண்ணோ அன்புக்கு விலையேது அடுத்தவரை நம்பிவிட்டால் அவதிக்கு உணர்வேது ஏசுவோர் இவரைப்பற்றி என்னென்ன சொன்னாலும் பேசுவோர் தவறாக-பிரிக்க பெருங்குறையைச் சொன்னாலும் ஈசனே எதிரில் வந்து இல்லாததைச் சொல்லி இருவரையும் பிரித்தாலும் இயலாமல் போய்விடுமாம் உறவென்றே இருப்பார்கள் உருகியுருகியே சிரிப்பார்கள் பெருமையாக நட்புகொண்டு பேரின்பம டைவார்கள் துன்பமே வந்தாலும் தோள்கொடுத் திருப்பார்கள் துடிப்போடு  எப்போதும்-அன்பு துணையாக இருப்பார்கள்

நண்பனே திரும்பி வா

நண்பனே நண்பனே நலமா நம்மூரில் எல்லோரும் நலம் நாடுகடந்த நம் நட்பு நாதியத்து போனதாலே வீதியெங்கும் பேசுகிறார் வேதனையாய் சொல்லுகிறார் சோதனையான நட்புக்கு-ஆறுதல் சொல்லும்படி இல்லையே காடுக் கம்மாய் சுத்தியது கிணத்துக்குள்ளே மூழ்கியது திருட்டு மாங்காயும் புளியும் திரும்பவும் உண்ணத்தோணுது நம்மூரு உணவுக்கு நானிங்கே அடிமை நண்பன் நீ சென்றதாலே நாக்கும்கூட தனிமை ஏக்கமாய் உள்ளது எப்போது நீ வருவாய் இருவருமே இங்கே-உழைக்க இணைந்தே செல்லலாமே சுற்றமும் நட்பும் சூழ்ந்து வாழ நீ வா உற்றதுணை எல்லோரும் உடனிருக்க திரும்பி வா +++++++கவியாழி+++++++

ரசித்தவர்கள்