Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/பக்தி

தெய்வங்கள்

தெய்வங்கள்

சித்தன் அருளே வேண்டும்.........

சித்தன் அருளே வேண்டும்-தினம் சிந்தனை செய்யவே வேண்டும் நித்தமும் நினைக்க வேண்டும்-மனதில் நிம்மதி கிடைத்திட வேண்டும் சத்தியம் போற்றிட வேண்டும் -நல்ல சங்கதி செய்திட வேண்டும் பத்தியம் இருந்திட வேண்டும்-எனக்கு பகலவன் துணையும் வேண்டும் நேர்மையாய் வாழ்ந்திட வேண்டும் -அன்பை நேசித்தே போற்றிட வேண்டும் சீர்மிகு நட்பும் வேண்டும் -என்னை சிரம்போல் காத்திடவேண்டும் கஷ்டமும் தீர்ந்திட வேண்டும் -எல்லோர் கவலையும் தீர்த்திட வேண்டும் இஷ்டமாய்ச் சிவனை நினைக்கும் -நிலை இனிதே நாளும் வேண்டும் எல்லா  வளமும் பெற்று -வறுமை இல்லா நிலையே வேண்டும் பொல்லா எதிரியும் மாறி -மீண்டும் நட்பினைத் தொடர்ந்திட வேண்டும் கொடுத்து உதவி செய்ய-பணம் குறையே இன்றி வேண்டும் கொடுக்கும் மனமே எனக்கு-நாளும் குறை வில்லாமல் வேண்டும் குறைகள் அகன்றே தீர-மனம் குளிர வணங்கிட வேண்டும் குடும்பம்  மகிழ்ந்து வாழ-சித்தன் கூடவே துணையாய் வேண்டும் ########கவியாழி########

ரசித்தவர்கள்