Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/பொங்கல்

தெய்வங்கள்

தெய்வங்கள்

பொங்கலைக் கொண்டாடுவோம் .....

உலகத்துத் தமிழரெல்லாம் ஒற்றுமையாய்ச்   சேர்ந்திருந்து தமிழன்னை மகிழ்ந்திடவே  தவறாமல் பொங்கல் வைப்போம் நல்லோரை நாடிச் சென்று நல்வாழ்த்து சொல்லிடுவோம் நம்மக்கள் மனம்மகிழ நாடிச் சென்று உதவிடுவோம் புத்தாடை  தனையுடுத்தி  புதுப்பானை பொங்கலிட்டு தலைக்கரும்பு மஞ்சளுடன் தலைவாழை இலைபோட்டு உலகாளும் சூரியனுக்கும் உழவனுக்கும் நன்றி சொல்வோம் உயரும் வழி என்னவென்று உள்ளோர்க்கு எடுத்துரைப்போம்

பொங்கலே பொங்குக.....

தாத்தன் பாட்டிச் சொந்தங்களை தமிழில் இல்லா வார்த்தைகளில் பார்த்தே மகிழ்ந்தே சிரித்திடுவீர் பாசம் கொண்டே அழைத்திடுவீர் நேற்றும் நடந்தக் கதைகளையே நேசம் கொண்டே பேசிடுவீர் நேர்மை வீரம் சத்தியத்தை நேரில் கண்டேப் பேசிடுவீர் ஊரும் உறவும் உள்ளதென உரிமைச் சொந்தம் நல்லதென பேரும் புகழாய் வாழ்ந்திருந்த பெரியோர் கதைகளைக் கேட்டுடுவீர் வீரம் மிகுந்த தமிழர்களின் வேட்கை நிறைந்தப் பாட்டுகளும் வீதியில் சூழ்ந்தே விளையாடி விரும்பிப் பழகி மகிழ்ந்திடுவீர் தாழ்ந்த உணர்வும் இன்றில்லை தரணி முழுதும் கொண்டாடி தமிழர் திருநாள் பொங்கலையே தமிழர் அனைவரும் பொங்கிடுவீர் மஞ்சள் கரும்புடன் படையலிட்டு மாட்டையும் ஆட்டையும் வர்ணமிட்டு பொங்கலை வைத்துப் படையலிட்டு புகழ்ந்தே மகிழ்ந்தே வணங்கிடுவீர் பொங்கலே பொங்குக என்றுரைத்து பொழுதும் அனைவரும் சூழ்ந்திருந்து மங்கள நாளில் ஒற்றுமையாய் மகிழ்ந்தே சேர்ந்து சாப்பிடுவீர் (கவியாழி)

ரசித்தவர்கள்