Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/முத்தங்கள்

தெய்வங்கள்

தெய்வங்கள்

அடங்காத முத்தங்கள் ஆயிரம்

ஆயிரம் முத்தம் தந்தும்  அடங்காத ஆசை கொள்வாள்  அடுத்தவர் முன்னே மகிழ்ந்து  அணைத்து மீண்டும் தருவாள்  தீராத அன்புடனே இருப்பாள்  தினமும் ஆவல் கொண்டே  திரும்பத் திரும்ப உணர்வாய்  கரும்புபோலக் கடிப்பாள்  தேக்கிவைத்த ஆசையெல்லாம்  தீர்க்கவே தினமும் கட்டியனைத்தே  திகட்டத் திகட்டத் தருவாள்  தீரும்வரை இணைந்தே மகிழ்வாள்  வெளியில் தெரியாத வெட்கத்துடன்  வீட்டில் புகுந்ததும் கொடுப்பாள்  வெளியூர் சென்றால் ஏங்கியே  வேதனையைத் தீர்ப்பாள் வந்ததும்  கட்டியணைத்து முத்தம் தந்து  கன்னத்தைக் கடித்தும் விடுவாள்  காலையும் மாலையும் தொடர்ந்து  கதைகள் கேட்டும் தருவாள்  நெஞ்சின் மீதேறி நெடுநேரம்  நிம்மதியாய் தூங்கி விடுவாள்  நேரத்தைக் குத்தகை கேட்டு  நீண்ட நேரம் முத்தமிடுவாள்  சத்தமில்லா முத்தங்கள் எத்தனை  தித்திக்குமே என்றென்றும் அதனை  வாடிக்கையாய் கிடைத்தால் தினமும்  வாராது துயரம் அதனால்  அன்பான முத்தங்கள் இழந்தே  அருகில் யாரும் உள்ளாரோ  இனிமை மறந்த முத்தம்  இடுவோர் யாரும் உளரா  (கவியாழி)

ரசித்தவர்கள்