Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/வாழ்கை

தெய்வங்கள்

தெய்வங்கள்

மனிதம் போற்றி வாழ்வோம்...

மழையுமில்லை பனியு மில்லை மக்கள் மனதில் மகிழ்ச்சி யில்லை உழைப்புக் கேற்ற ஊதிய மில்லை உழவன் மனமோ ரொம்பத் தொல்லை நகர வாழ்க்கை விரும்ப வில்லை நடந்து செல்ல பாதையும் மில்லை அடுத்த வீட்டு நட்பு மில்லை  அன்புகொண்டு பேசவு மில்லை வணிகன் கடைகள் திறப்ப தில்லை வயித்துக் கேற்ற உணவு மில்லை பிழைப்புக்கேற்ற ஊதிய மில்லை பிழைக்க வழியும் தெரிய வில்லை பிள்ளைப் படிப்பை முடிக்கவில்லை பீசு கட்ட கையில் பணமுமில்லை படித்து முடித்தும் வேலையு மில்லை பசங்க வாழ்வும் நிம்மதி யில்லை பிறந்த வாழ்வை முடிக்க வேண்டி பிழைகள் கண்டு மனமும் வெம்பி உலக நடப்பை மனதில் எண்ணி உணர்ந்து வாழ்வோம் மனிதம் போற்றி (கவியாழி)

ரசித்தவர்கள்