Posts

Showing posts with the label கவிதை/மகிழ்ச்சி/நன்றி

தெய்வங்கள்

தெய்வங்கள்

மனிதம் போற்றி வாழுங்களேன்

இனமே தமிழன் என்றுரைத்து எதிலும் சேர்ந்தே முடிவெடுத்துப் பணமோ மதமோ பாராமல்-நட்பை போற்றி தினமே வாழுங்களேன் அண்ணன் தம்பி உறவுகளாய் அனைவரும் கூடி வாழ்வதனால் திண்ணைதோறும் நட்புறவாய்-அன்பை தினமும் போற்றி மகிழ்ந்திடலாம் உறவை மறுத்து வாழ்வதனால் உயர்வும் மகிழ்வும் தடையாகும் பிரிவைப் போற்றி வாழாமல்-ஒன்றிப் பிணைந்தே  மகிழ்ந்தே வாழுங்கள் மகிழ்ச்சியின் தத்துவம் புரியுமே மனித நேயம் தெரியுமே மக்கள் மனதை அறியுமே-உறவை மானிடம் போற்றி மகிழுமே சாதியும் மதமும் சொல்கிறது சரிசமம் உயிரென உயர்வாக நீதிக் கதைகளும் இதிகாசம்-எங்கும் நித்தம் சொல்வதும் இதைத்தானே மனித நேயம் வேண்டாமென மதமும் எங்கும்  சொன்னதில்லை மனிதனாக வாழ்வதற்கு  -நீங்களும் மனிதம் போற்றி வாழுங்களேன்

உங்கள் அன்பிற்கு நன்றி- 28.08.2013 ல் ஓராண்டு நிறைவு

Image
                                                                     எல்லோருக்கும் நன்றி மொத்தப் பதிவுகள்                ; 295 கருத்துரைகள்                     ; 6,073 வருகைத் தந்தவர்கள்         ; 37,943 வலையில் இணைந்தவர்கள்          ; 131 நிலையாக ஒன்றே சொல்லாமல் நில்லாது தினமே எழுதியுமே சுவையாக மகிழ்வாக இருந்திடவே சுறுசுறுப்பாய் எழுதியது அத்தனையும் விலைக்காக  எதையுமே எழுதவில்லை வேதனையும் யாருக்குமே தந்ததில்லை கலையாக எண்ணியேக் கவிதைகளை காலமெல்லாம் எழுதிடவே வாழ்த்துங்களேன் குறுகிய காலத்தில் இத்தனையும் குறையாத  அன்போடு என்னுடனே குறைவான  எண்ணிக்கையில் வந்தாலும் குற்றமென  எந்நாளும் கூறாமல் பிடிக்காமல் போனாலும் பழிக்காமல் பிழைகளை தவறாக எண்ணாமல் தமிழ் மணத்தில் இடம்பிடிக்க தந்திட்டீர் ஐந்தாவது இடத்தினையே நிலையாக இவ்விடத்தில் நிரந்தரமாய் நிற்பதற்கு என்னாலே இயலாது ஆனாலும் தந்திடுவீர் ஆதரவை அன்புடனே நல்லாசி வேண்டுகிறேன்

ரசித்தவர்கள்