Posts

Showing posts with the label பயணக்கட்டுரை/கேரளா/சந்திப்பு

தெய்வங்கள்

தெய்வங்கள்

இணையத்தால் இணைந்தோம் மகிழ்ந்தோம்-2

Image
.  இரண்டாவது நபராக திரு.துளசிதரன் அவர்களைத் தொடர்புகொண்டு பேசியபோது ஓ..மீசைக்கார நண்பரா என்று கேள்விகேட்டுவிட்டு அவரே தொடர்ந்து நிச்சயம் நான் உங்களைச் சந்திக்க வேண்டும்உங்களை எங்கு எப்படி எப்போது காண்பது என்று ஆசிரியருக்கே உரித்தான கேள்விகளால் மகிழ்வோடு கேட்டார்.நானும் திங்கட்கிழமை வந்து அன்றிரவே சென்னைத் திரும்ப இருக்கிறேன் என்றதும் ஏன் இன்னொருநாள் தள்ளிபோட முடியாதா என்று திரு.தேவதாஸ் அவர்களைப் போலவே கேட்டார்.   நான் என் நிலையைச் சொல்லி அவசர வேலையாக வந்த காரணத்தினால் இப்போது முடியாது மற்றொருநாள் வருகிறேன் பிறகு பார்க்கலாமே என்றதும்  உடனே இல்லை இல்லை நண்பரே உங்களை நான் எப்படியும் பார்த்துவிட  வேண்டும் நான் பணி செய்யும் இடம் பாலக்காடு என்றும் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிசெய்வதாகவும் இங்கிருந்து 180 கிலோ மீட்டர் தள்ளி எனது வீடு உள்ளதென்றும் திங்கள் வந்து வெள்ளியன்று வீடு திரும்புவேன் என்றும் சொல்லியதுடன் இன்றிரவு 10.30 மணிக்கு உங்களது தொடர் வண்டி பாலக்காடு வரும் அப்போது உங்களைச் சந்திக்க முடியுமா அல்லது தூங்கி விடுவீர்களா என்றார்."கரும்புதின்னக் கூலியா நண்பரை சந்திக்க சிர

இணையத்தால் இணைந்தோம் மகிழ்ந்தோம்

Image
          நான் அவசர வேலையாக கேரளாவிலுள்ள  கொச்சின் நகருக்கு செல்வதாய் இருந்தேன்.நான் செல்லும் எல்லா ஊர்களிலும் ஏதாவதொரு இணைய நண்பர்களை சந்திக்க விரும்புவது வழக்கம் அப்படி செல்லும் முன் இணையத்தின் இணையில்லாத தவிர்க்க இயலாத அனைவரும் அறிந்த நண்பர் திரு.திண்டுக்கல்.தனபாலனிடம் கேரளாவில்  இணைய நண்பர்கள் உள்ளனரா என்று ஒரு நாள் முன்புதான் கேட்டேன்.மாலை என்னை அழையுங்களேன் என்று  சொன்னார் மாலையில் அவர் இரண்டு நண்பர்களின் கைப்பேசி எண்களைத் தந்து நீங்களே பேசிவிடுங்கள் என்றார்.         23.03.2014 அன்று  மாலை நான் திரு.தேவதாஸ் அவர்களை தொடர்பு கொண்டபோது மகிழ்ச்சியுடன் என்னை நினைவு கூர்ந்து  எனது தளத்துக்கு வந்து அனைத்தையும் படிப்பேன் என்றும் மற்ற இணைய நண்பர்களைப் பற்றியும் விசாரித்தார்..அப்போது இன்று இரவு புறப்பட்டு நாளைக் காலை எர்ணாக்குளம் வருகிறேன், நான் பயணிக்க ஒரு வாடகை மகிழுந்து (கார்) வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன் உடனே இன்னும் சிறிது நேரத்தில் தொடர்பு கொள்கிறேன் என்று சொன்னபடியே உங்களுக்கு வாடகைக் கார் பேசிவிட்டேன் என்றார்.மேலும் நானே நேரில் வருகிறேன் என்று மனமுவந்து சொன்னது எனக்கு மக

ரசித்தவர்கள்