Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

பிணங்களை பேச வைக்க முடியுமா..? ஒரு பகீர் தகவல்.! - புதிய உலகம்.கொம்

பிணங்களை பேச வைக்க முடியுமா..? ஒரு பகீர் தகவல்.! - புதிய உலகம்.கொம்

சித்தனே போற்றினான்!

Image
    சித்தனே போற்றினான் சிந்தையில் எற்றித்தான் அத்தனை அரிதான வித்தையை செய்திட்டான் கற்றதை மற்றோருக்கு கற்பித்து மாற்றினான் கண்டத்தில் தமிழனை கருத்தாக்கி மெருகூற்றினான் பக்தனாயும் இருந்தான் படைக்கவும் செய்தான் புத்திமாறாது தவம் பொழுதும் செய்தான் சத்தமும் அவனே சந்திர சூரியனும் சரீரமான நீரும் காற்றும்  சிவனே எத்தனை  கடலும் ஏழுலகமும் நீயே அப்பனே சிவனே அனைவரையும் [போற்றி நித்தமும் சிவமே நினைவெல்லாம்  சிவனே பித்தனே  உன்னை பொழுதும் நினைவேனே ஓம்  நமசிவய ஓம்  சிவ சிவ

இமை மூடி பாருங்கள்

Image
இமை மூடி பாருங்கள் இளமையை இனிதாக்கி மகிழுங்கள் முன்போல் சுமையாக எண்ணாமல் சுகமாக-ஆற்றல் சீர்நிறுத்தி சீர்தூக்கி பாருங்கள்  ஆனந்தமே அந்த நாட்கள் மீண்டும் வராது ஆனாலும் இன்று போல்  நாளை தேனாக சொல்லமுடியாது- இருந்தும் மான் ஆகா விட்டாலும் மயிலாகலாம் சொந்த நாட்கள் சொல்லி வந்தநாட்கள்  அந்த கால அருமையான தருணங்கள் பந்தமானது பாசமானது  அன்பினால்-இன்று கந்தலானது  கனவானது  சொந்தமே கூட நட்பும் வேண்டும் நாளும் பகிர நல்லன்பும் வேண்டும் பேரப்பிள்ளை பேச்சை கேட்டு பாடவேண்டும் பின்-மகிழ்ச்சி பரவசத்தால்  பாட்டியோடும் ஆடவேண்டும் ஆயிரம் கதை வேண்டும்  அவர்களுக்கு ஆனந்தமாய் சொல்ல வேண்டும் தினமும் பாராத பிள்ளையிடம் பாசம்போல் -நடிக்கும் பண்பும் வேண்டும் ஆறாத ஏக்கத்தால் பேரன்  பேத்திக்காக பிள்ளையிடம் பேரன்பாய் இருப்பது போல்  வேண்டும் பிரியமுடன்  மருமகளிடம் சிரித்து-பாசத்திற்கு  பிரிவின்றி கிடைத்திட பழக வேண்டும்

தாழ்வான பகுதிக்கு தடுமாறி வந்திட்டேன்

Image
வாழ்வோரை பார்க்க வரவேண்டு மென்று ஆழ்வான காற்று என்னை துரத்தி நோய்போல் என்னை நிறுத்தியதால்- ஏனோ தாழ்வான பகுதிக்கு தடுமாறி வந்திட்டேன் இதுவும் எனக்கு மகிழ்ச்சிதான் இருந்தும் மனதில் வருத்தம்தான் கடலில் மூழ்கி இறந்துவிட்ட அய்வரை-மரண துயரில் மூழ்கிட செய்தது நானல்ல எவ்வளவோ ஆழத்தையும் நான் நீந்தினேன் எண்ணில்லா பகுதியை தாண்டி சென்றேன் தப்பிதமாய் வாழ்ந்ததில்லை தறிகெட்டு-கரையில் ஒப்பில்லாது வாழ்ந்து ஒய்வாகதான் உள்ளேன் நிலப்புயல் எனக்கு நிம்மதி தர கரைநோக்கி என்னை தள்ளியதால் நானே கவனிப்போர் நிறைந்து காண்கின்றேன்-இன்றும் அகிலத்தார் பார்க்க எனக்கும் மகிழ்ச்சிதான்

நீ மனிதனாய் யோசி

Image
மனித பிறப்பே மகத்தானது மகம் பிறந்ததும் வியப்பானது திசை எங்கும் நோக்கி மகிழ்ச்சி திளைத்திட்ட பெற்றவர்கள் உழைத்திட்ட மணித்துளிகள் உருமாறி  போனதற்காய் இளைப்பாறி இருந்திட்டார் இலைப்பூவாய் வளர்த்திட்டர் குலை சிதைத்து விட்டதானால் குடும்பமே நடுத்தெருவில் பிழைசெய்தவர்  யார் புரியாது  ஏன் செய்தீர் தழைக்குமா உன் குடும்பம் தனியாக யோசித்துப் பார் சாதி  சண்டைகள் தேவையா சரிகின்ற உயிர்கள் நியாயமா சாதி சண்டையால் சங்கடத்தை சதியாக்கும் சண்டாளன்  மடிவானா மனிதனை  நேசி மகிழ்ந்து மனிதனாய்  சற்று யோசி

ரசித்தவர்கள்