Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

சின்னஞ் சிறு விதைகள்

இறக்கும் முன்னே எதிரியை மன்னித்துவிடு-ஆனால் துரோகியை நினைக்காதே                   ***** நன்றியை கடமைக்கு சொல்லாதே நன்றி உள்ளவனாய் இரு-அதுவே நன்மையாய் தொடரும் துணையாக                   ***** சோதனை  வரும்போது வேதனை கொள்ளாதே-அப்போது வீழ்த்திவிடும் உன்னை                  ***** நேர்மை இருந்தால் நிச்சயம் வெற்றி-ஆனாலும் பொறுமை வேண்டும்                   ***** மன்னிக்க தெரிந்தவன் மனிதனாகலாம்-ஆனால் கோழையாய் வாழ்ந்திடாதே                    *****

தூக்கம் போச்சு

இன்னைக்கு ஏனோ தூக்கம் போச்சு ஆனா துயரமில்லை ஏக்கமும் இல்லை ஏனோ தெரியலை தூக்கம் போச்சே கொசுவும்  இல்லை பசிக்கவும் இல்லை ஏனோ தூக்கம் போச்சு

பூ மாலை

வண்டுண்ட தேன் வழிந்தோடி  செல்ல நண்டு குழம்போடு நங்கையும் காத்திருக்க கண்டவுடன் காமம் கவர்ந்திழுக்க அவனை கட்டியணைக்க நினைத்தாள் பௌர்ணமி  நிலவில் பனிமழை வெளியில் குளிரிலும் சூடாக குமரியின்  தேகம் பருவத்தின் தாகம் அவளுக்கும் மோகம் காத்திருந்த கன்னியை கண்டவுடன்  தீண்டாமல் கண்ணிமையை கவ்வி பெண்மையை தூண்டினான் பேரமுதை தூண்டினான் தேகத்தை  சூடாக்கினான் திசையெங்கும் நகர்த்தி தீண்டி தீண்டி யாடினான் மாதுலையுள் துளைத்து மீண்டும் மீண்டும் மகிழ்ந்தான் தேகத்தை தென்றலாய்  நுகர்ந்தான் இறுதியாய்  தீயை  உணர்ந்தான்

தமிழை மணந்து தழுவி மகிழ்கின்றேன்

தடம்கேட்டும் தவிக்கின்ற இந்நாளில் தானாக முன்வந்து வழி சொல்லும் புடம்போட்ட நண்பர்களாய் புறப்பட்டு-என் இடம்தேடி  வாழ்த்தும் நண்பர்களே தென்றலாய் வந்து தீண்டியவரும் தினமும் என்னை நாடிவரும் அன்றலர்ந்த பூவைப்போல சூடி-நாளும் அன்பாக நட்பு சொல்லும் அன்பர்களே விதையாக தொடரும் எனது கவிதைகள் விரைவில் முளைக்க துணைபுரிந்து விளையாடும் இலக்கிய மேடைதனில்-நானும் விரைவாக விழுந்து எழ விரும்புகிறேன் துணையாக இருந்து வழி சொல்லி தினமும் என் கவியை படித்து தெரிகின்ற தவறை  தினம் சொன்னால் -நான் திகட்டாமல் ஏற்பேன் திருத்திக் கொள்வேன் தமிழோடு விளையாடி தனியாக உறவாடி துளியாக மனதில் துளிர்கின்ற சிந்தனையை தரணியோரும் படித்து வாழ்த்த-தமிழனாய் பிறந்ததே பேரின்பம் ஆனந்தம் உற்சாகம் வளமாக வேண்டும் வரைகின்ற கவிதை வாழ்நாளில் தோன்றும் நிறைவான  நினைவே தளமாக எண்ணி தாங்கி கொண்டே-உயிராக தமிழை மணந்து தழுவி மகிழ்கின்றேன்

மகிழ்ச்சியான வாழ்வுக்கு

மகிழ்ச்சியான வாழ்வுக்கு மனிதனை நேசி மனிதநேயம் கொண்டு மனநிறைவாய் யோசி நல்லதையே பேசி நாணயமாய்  செய்து- நட்புடன்  நல்லிணக்கம் உள்ளவனாய் நல்லோரை  யாசி மரங்களை வளர்த்தால் மழை பெறலாம் மனதை வளர்த்தால் வளம் பெறலாம் இழைதலை கொடியால் நிழல் பெறலாம்-எப்போதும் இனிமையாய் பேசினால் இன்பம் கிடைக்கலாம் உழுதவன் உழைத்தால் உணவு உண்ணலாம் உண்மையாய் நடந்தால் உள்ளம் மகிழலாம் குயவன் செய்வதுபோல் வாழ்வை-குணமாக குடும்பம் தழைக்க வழி செய்யலாம் காற்றும் நீரும் மாசு படாமல் காலை எழுந்ததும் தூசு இல்லாமல் நேசம் தழைக்க நிம்மதி கொடுக்க-தமிழ் பாசம் பொங்கம் பண்புடன் வாழ்வீர்

ரசித்தவர்கள்