Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

இனிமையான வாழ்வுக்கு தேவை

இளமையான நாட்களில் இல்லறம் அமைத்திட்டால் இனிமையான பிள்ளைப்பேறு சீக்கிரமே கிடைத்திட துணையோடு மனம் மகிழ்ந்து துள்ளலுடன்-அன்போடு இணைந்து அளவோடு பேசி வாழுங்கள் இன்பத்தைத் தேடி இணையாக ஒன்றிணைந்து சந்தமும் பாட்டும்போல சங்கமம் கூடி திங்களாய் சேர்ந்த திரவியத்தை – முத்ததாக ஆழியுள் சேர்த்து அங்கத்துள் வைத்தது அன்று முதல் குடத்துள் கருவாக்கி ஐந்தாவது வாரத்தில் அழகான உருவாக்கி பிஞ்சு விரலும் அவயங்களும் பேழைக்குள்-உருவாகி நஞ்சுக் கொடியுடன் இணைந்து வளர்ந்து கொஞ்சும் குரலையும் குடும்ப உறவையும் மஞ்சமென போற்றி மாணிக்கமாய் ஜொலிக்க பத்துமாதம் முன்னே பாசத்தோர் ஏங்க-பிள்ளை பரவசம் பொங்க பாரினில் பிறந்திடுமே

எனக்கு வேண்டும்

 என்கடவுள் பெற்றோரை வணங்க வேண்டும் எந்நாளும் மறவாதிருக்க வேண்டும் என்குடும்பம் மகிழ்ச்சியில் திளைக்க -எப்போதும் எல்லாமும் கிடைத்து நிம்மதி வேண்டும்  பெரியோரை தினமும் மதிக்க வேண்டும் பிழை இல்லா பேரின்பம் அடைய வேண்டும் நல்லோரை  மதித்து நல்லாசி வேண்டும்-வாழ்வு நலமாக நான்வாழ அருள்புரிய வேண்டும் எல்லோர்க்கும் உதவும் எண்ணம் வேண்டும் எதிரிக்கும் கெடுதல் செய்யாதிருக்க வேண்டும் புகழுக்கு  அடிமை ஆகதிருக்க வேண்டும் -பிறந்தாலும் மீண்டும் தமிழனாய் இருக்க வேண்டும் எளியோர்க்கும் கல்வி கிடைக்க வேண்டும் ஏழைகளும் மகிழ்ச்சியாய் சிறக்க வேண்டும் என்னால் முடிந்தால் உதவ வேண்டும்-இப்பிறப்பில் எப்போதும் மனிதம் போற்றி வாழ வேண்டும் www,kaviyazhi,com

21.12.2012 ல் உலகம் அழியுமா? அழியாது!

நெஞ்சில் ஈரமின்றி மனித நேயமின்றி வஞ்சகமாய் கூட்டி வாழ்வை அழித்து பிஞ்சுக்குழந்தை பெண்களை முதியோரை-கொன்ற பஞ்சமா  பாதகன் பதவியிழந்து அழிவான் நேர்மை  மறந்து நிம்மதி கெடுத்து ஊரை  ஏய்த்து பணம் திண்ணும் பேரை மாற்றும் பிறவித் திருடன்-அழிவான் பிறரை  ஏமாற்றிய பொருளையும் இழப்பான் அரசியல்  செய்யும் அறிவியல் திருடன் அவசியமின்றி பொய்களை பேசி வாழ்பவன் துறவி என்று தவறு செய்யும்-துன்பமாக்கி உறவை கெடுப்பவன்  உரிமையிழந்து  மடிவான் அடுத்தவன் நாட்டு பணத்துக்கு ஆசைப்பட்டு ஆணவம்  மிகுந்து அறிவு கெட்டு படைத்தோரை மறந்த படுபாவிகள்-சேர்த்த பணத்தை இழந்து தவிப்பான்  உணர்வான்                               ****** உலகம் அழியாது உண்மைகள் தோற்காது

பார்த்ததும் கேட்டதும்

                                    பயணிகள் கவனத்திற்கு                                                      *****               நான் அலுவல் நிமித்தமாகவோ அல்லது சொந்த வேலையாகவோ அடிக்கடி  செல்வதுண்டு எனது நான்கு சக்கர வாகனத்தில் அடிக்கடி  செல்வதுண்டு  அவ்வாறு தனியாக செல்வதால் பெட்ரோல் செலவை மீதப் படுத்துவதோடு தேசத்தின் அன்னியசெலாவணியைக் குறைக்கும் விதமாக பேருந்தில் சென்று வருவது வழக்கம் .              பெரும்பாலான  பேருந்துகளில் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது .அரசாங்க தனியார் ஊர்திகள் பலவற்றிலும் தற்போது காதைப்பிளக்கும் பாட்டு சினிமா போன்றவற்றை துண்டித்து விட்டார்கள் இது விபத்தை தடுக்கவும் கவன சிதறலை தடுக்கவும்  இருக்குமென நினைத்து சந்தோசப்பட்டேன் .              ஆனால் நமது மக்கள் பாட்டு விரும்பி கேட்கிறார்கள் அதனால் எப்போது காதில் ஹெட் போன் மாட்டிக்கொண்டே வருவார்கள்.பிறரிடம் பேசும்போதுகூட நீக்கி விட்டு பேச மாட்டார்கள்,சில சமயம் திடீரென்று பாடுவார்கள் சிரிப்பார்கள்  ஹம் ...ஹம் .. என்றுகூட சொல்லுவார்கள்            இதெல்லால் ஆர்வ மிகுதியால் அல்ல தன்னிடம் உள்ள கைபேசியில் இந்த வசதி

மதமின்றி மனிதனாக முடியுமா

01.12.12 அன்று எழுதியதின் மறுப் பதிவு மீண்டும் அந்தநாள் வருமா மேகமெல்லாம் கூடி மழை தருமா ஆற்றில்  நீர் பெருக்கெடுத்து-அருகருகே அங்கங்கே ஏரி குளம் நிறையுமா மீனும் தவளையும் துள்ளி விளையாடி மீண்டும் நீரில் மகிழ்ந்து செல்லுமா பாம்பும் தேளும் பணிந்துபோய்-அன்பாக பார்ப்போரை வணங்கி திரும்புமா மாடும் கன்றும் பச்சை தழையை மீண்டும் மீண்டும் புசியுமா ஆடு கோழி அனைத்து உயிரும்-அங்கங்கே ஆனந்தமாய்  உணவு பெறுமா கோள்கள் ஒன்பதும் கூடி மக்கள் குறை தீர்க்க நாடி வருமா கூப்பிட்டதும் கடவுளும் நமக்கு-வாழ குறையில்லா அருள் தருமா சுத்தமான காற்றும் சுவையான நீரும் எத்திசையும் பசுமையான செடிகொடியும் எழுந்தோடும் பறவை கூட்டமும்-வருமா  எண்ணில்லாப் பூச்சி புழுவும்  காணுமா தேன்  வண்டு திரிந்தோடி பறந்து வானெங்கும் வாசம் வீசும் மலர்கள் நாம்  உண்ணும காய் கனிகள்-சுத்தமாக நாள்தோறும் கிடைக்க முடியுமா மாண்டோர் வாழ்ந்த மகிழ்ச்சியான மனிதநேயம் மக்களிடம் திரும்புமா மனத்தாங்கல் இன்றி ஒற்றுமையாய் மதமின்றி மனிதனாக முடியுமா

ரசித்தவர்கள்