Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

நுங்கும் நீரும்

இளமையான நுங்கெடுத்து பதமாகப் பார்த்து சீவி அதுள் ஒரு விரலால் அழுத்தினால் உடனே ப்ளீச் என்று நீர் வரும் மீண்டும் மீண்டும் விரல் நுழைத்து வாயால் கவ்வினால் தீண்டும் சுவை தீராது மீண்டும் கேட்கும் மறுபடி அதையே நோக்கும் பின் ஆசையும் அப்போதே அடங்கும் மனமும் அமைதியாகும்

பூ வை ..பூவையே

பூ வை தலையில் பூவையே மை வை நெற்றியில் தமிழே மீன் வை மின்னலாய் கண்ணையே நீ வை நினைவில் என்னையே பா வை தமிழில் கவியே கோ வை மனதில் எண்ணியே தீ வை தினமும் ஆசையில்

உறவு மின்று செத்துடிச்சு

மழையப் பார்த்து ஏங்கிடுச்சு கண்ணி ரண்டும் பூத்திடுச்சி மேக மெல்லாம் ஓடிப்போச்சு மேனி யெல்லாம் எரிஞ்சிடுச்சி குளமெல்லாம் வத்திப் போச்சு கொக்கு நாரை அதிகமாச்சி வயலெல்லாம் காஞ்சி போச்சு ஆடு மாடு மேஞ்சிடுச்சி நில மெல்லாம் மனைகளாச்சு நிறைய வீடு வந்திடுச்சி நில மற்று போனதாலே உழவன் வாழ்க்கை மடிஞ்சிடுச்சி மனதெல்லாம் மாறிபோச்சு மனிதநேயம் குறைஞ்சிடுச்சி பணத்துக்காக அடகு வச்சு கனத்த வட்டி வளர்ந்துடிச்சி இனத்துச் சண்டை வந்துடிச்சு இதய மெல்லாம் நொறுங்கிடுச்சி தேச நலன் குறைஞ்சிடுச்சி தேவை மட்டும் மாறிடுச்சு உணர்ச்சி யெல்லாம் மழுங்கிடுச்சி உண்மையன்பு தேய்ந்சுபோச்சு உருப்படியாய் சேர்ந்து வாழும் உறவு மின்று செத்துடிச்சு

வேண்டும் வேண்டும் நிம்மதி வேண்டும்

மீண்டும் எனக்கு நிம்மதி வேண்டும் மீளாத் துயரும் தாண்டிட வேண்டும் தாண்டும் உயரம் தெரிந்திட வேண்டும் தாழ்மை உணர்வு நீங்கிட வேண்டும் நாளும் நட்பை புரிந்திட வேண்டும் நல்லவர் கெட்டவர் அறிந்திட வேண்டும் பாழும் மனமே திருந்திட வேண்டும் பண்பில் நல்லவர் துணைவர வேண்டும் தீதும் நன்றே என்றிட வேண்டும் தீமை இல்லா மனதும் வேண்டும் தீயவர் ஒதுங்கி போய்விட வேண்டும் தினமும் என்னை அழைப்பவர் வேண்டும் பாலை நிலமும் மாறிட வேண்டும் பருவம் முழுதும் மழைபெற வேண்டும் பறவை குருவிகள் பயனுற வேண்டும் பார்க்கும் இடமே செழிப்புற வேண்டும் உழவன் வாழ்க்கை சிறப்புற வேண்டும் உழுதே விளைச்சல் பெருகிட வேண்டும் வேளை தோறும் உறக்கம் வேண்டும் வேதனை இல்லா கனவும் வேண்டும் நாளை நடப்பதை அறிய வேண்டும் நல்லது கெட்டது தெரிய வேண்டும் வேளை தவறா உணவும் வேண்டும் விடியல் தோறும் மகிழ்ச்சி வேண்டும் சோர்வே எனக்கு நீங்கிடவேண்டும் சோதனை இல்லா வாழ்க்கை வேண்டும் நாளை எனதே என்றிட வேண்டும் நாளும் நல்லதை செய்திட வேண்டும்

தேடிவரும் பறவையே

Image
தேனெடுக்க ஆசையாய் என்னை தேடிவரும் சிறுப் பறவையே ! நான் வணங்கும் மன்னவன் நாளை வேண்டும் வேளையில் தான் குடிக்க வேண்டியதை தாகம் தீர்த்து சென்றவரை ஏன் தடுக்க முடியவில்லையென என்மீது கோபபட்டால் என்செய்வேன் ? என்னை விட்டு விலகிவிடு விரைந்து தூர பறந்துவிடு பட்டுபோன்ற உன்னழகை பார்த்ததினால் கெட்டுபோன மனதை மட்டும் தந்துவிடு

ரசித்தவர்கள்