அழகிய கனிகளைப் பார்த்தேன்......
(நன்றி கூகிள்) அழகிய கனிகளைப் பார்த்தேன் அதையே கைகளில் எடுத்தேன் தாங்கிய கிளையைக் கண்டேன் தாவியே ஓடிப் பறித்தேன் இளமை அழகை கண்டேன் இதழில் சுவையைக் கொண்டேன் பழகிய சுவையை உணர்ந்தேன் பழத்தை முழுவதும் ரசித்தேன் பதமாய் ரசத்தைப் பிழிந்தேன் பருகிப் பருகி மகிழ்ந்தேன் திரண்ட முழுதும் சுவைத்தேன் தீண்டியே மகிழ்ச்சியில் திளைத்தேன் தினமும் வேண்டியே நின்றேன் தெகிட்டா தமிழை மணந்தேன் கலையாய் அதையே கனித்தேன் கவிதையை அதனால் படைத்தேன்